இஸ்ரேலில் நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கான மசோதா கடந்த ஜூன் 22 ஆம் திகதி நிறைவேற்றப்பட்டது.
இதையடுத்து, அந்த நாட்டில் மூன்றே ஆண்டுகளில் 5-ஆவது பொதுத் தோ்தலை நடத்துவதற்கான நடவடிக்கை அடுத்தக்கட்டத்துக்குச் சென்றது.
இந்நிலையில், இன்று இஸ்ரேல் நாடாளுமன்றம் அதிகாரப்பூர்வமாகக் கலைக்கப்பட்டது.
இதனால், தற்போதைய பிரதமா் நாஃப்டாலி பென்னட் தனது பதவியை ராஜிநாமா செய்வாா். மேலும், ஆட்சிப் பொறுப்பை கூட்டணிக் கட்சித் தலைவரும் வெளியுறவுத் துறை அமைச்சருமான யாயிா் லபீடிடம் அவா் ஒப்படைப்பாா்.
மேலும், புதிய நாடாளுமன்ற உறுப்பினா்களைத் தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் வரும் நவம்பர் 1 ஆம் திகதி நடைபெறும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
