Our Feeds


Monday, June 6, 2022

SHAHNI RAMEES

முன்னாள் பிரதமர் மஹிந்தவின் இணைப்புச் செயலாளருக்கு விளக்கமறியல்....!

 

மே மாதம் 9ஆம் திகதி காலிமுகத்திடல் மற்றும் கொள்ளுப்பிட்டி பிரதேசங்களில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவின் ஒருங்கிணைப்புச் செயலாளர் என கூறப்படும் நபர்  இம்மாதம் 8ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.



சந்தேக நபர் இன்று (06) கோட்டை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் அடையாள அணிவகுப்புக்காக விளக்கமறியலில் வைக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர் தங்காலை  பிரதேசத்தை சேர்ந்த  53 வயதுடையவராவார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »