பதுளை ஆதார வைத்தியசாலையில் பிணியிலிருந்த வைத்தியரை தாக்கி வைத்திய உபகரணங்களை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பதுளை வைத்தியசாலைக்கு உடல் நலக்குறைவினால் அனுமதிக்கபட்ட ஒருவர் உயிரிழந்ததன் காரணமாக, அதன்போது கடமையிலிருந்த வைத்தியர் அவரின் உறவினர்களால் தாக்கப்பட்டுள்ளார்.
இதன்போது பலத்த காயமடைந்த வைத்தியர் வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில் வைத்தியசாலையின் வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் பதுளை வைத்தியசாலையில் நிர்வாகம் இணைந்து வைத்தியசாலையின் முன்றலில் குறித்த சம்பவத்தை கண்டிக்கும் விதத்தில் நேற்று எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். பதுளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்