ரஷ்யாவின் ஏரோஃப்ளோட் விமானம் இலங்கையிலிருந்து வெளியேறுவதைத் தடுக்கும் தடை உத்தரவை கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்றம் இடைநிறுத்தி உத்தரவிட்டுள்ளது.
ரஷ்ய ஏரோஃப்ளோட் விமான சேவைக்கு சொந்தமான விமானமொன்றுக்கு இலங்கையிலிருந்து புறப்படுவதற்கு கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்றம் அண்மையில் தடை உத்தரவு பிறப்பித்திருந்தது.டீ
எனினும், சட்டமா அதிபரினால் இன்று தாக்கல் செய்யப்பட்ட நகர்த்தல் பத்திரத்தை பரிசீலித்த கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்ற நீதிபதி ஹர்ஷ சேதுங்க குறித்த தடை உத்தரவை இடைநிறுத்தி உத்தரவிட்டார்.