Our Feeds


Wednesday, July 27, 2022

SHAHNI RAMEES

மஹிந்த, பெசில் வெளிநாட்டு தடை ஓகஸ்ட் 2 வரை நீடிப்பு

 

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ ஆகியோருக்கு வெளிநாடு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது.

ஓகஸ்ட் 2ஆம் திகதி வரை வெளிநாடு செல்ல முடியாது என உயர் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு காரணமானவர்களுக்கு எதிராக விசாரணை நடத்துமாறு கோரிய மனு தொடர்பான விசாரணைகள் இன்னும் நிறைவடையாத நிலையிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »