Our Feeds


Friday, July 29, 2022

SHAHNI RAMEES

பயணச்சீட்டு வழங்காத 3 பஸ் நடத்துனர்கள் பணி நிறுத்தம்?


 பயணிகளிடம் பணம் பெற்று பயணச்சீட்டு வழங்காத இலங்கை போக்குவரத்து சபை பஸ்களின் நடத்துனர்கள் மூவரின் சேவை இடைநிறுத்தப்பட உள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.


மொனராகலையிலிருந்து மாகும்புர வரையிலும் காலி முதல் கடவத்தை வரை பயணிக்கும் அதிவேகப் பஸ்கள் இரண்டும் மற்றும் தங்காலையிலிருந்து எம்பிலிப்பிட்டிய வரையிலான பஸ் ஆகியவற்றில் கடமையாற்றிவந்த நடத்துனர்கள் மூவரே இவ்வாறு பணம் பெற்றுக்கொண்டு பயணச்சீட்டு வழங்கவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக அந்த அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.


இந்த நடவடிக்கையின் போது மொனராகலையில் இருந்து மகும்புர செல்லும் பஸ்ஸில் 2,190 ரூபா பெறுமதியான பயணச்சீட்டு ஒன்றும், காலியில் இருந்து கடவத்தை செல்லும் பஸ்ஸில் 1,190 ரூபா பெறுமதியான 9 பயணச்சீட்டுகளும், தங்காலையில் இருந்து எம்பிலிபிட்டிய செல்லும் பஸ்ஸில் 5 டிக்கெட்டுகளும் வழங்கப்படவில்லை என அந்த அதிகாரி தெரிவித்தார்.


குறித்த பஸ் நடத்துனர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »