Our Feeds


Friday, July 29, 2022

SHAHNI RAMEES

இறுதி கட்டத்தை எட்டியுள்ள சீனாவுடனான 4 பில்லியன் டொலர் கடனுதவி பேச்சுவார்த்தை


 சீனாவிடமிருந்து 4 பில்லியன் டொலர் கடனுதவிப் பொதியை பெற்றுக்கொள்வதற்கான பேச்சுவார்த்தை மிக விரைவில் முடிவடையும் என சீனாவுக்கான இலங்கைத் தூதுவர் பாலித கொஹொன தெரிவித்துள்ளார்.

Nikkei Asia News செய்திச் சேவை உடனான கலந்துரையாடலில் கலந்து கொண்ட அவர், பேச்சுவார்த்தைகள் மிக விரைவில் முடிவடைந்து சாதகமான முடிவு கிடைக்கும் என்று கூறியுள்ளார்.

இந்த கடன் உதவிப் பொதியின் மூலம், இலங்கைக்கு தற்போது வழங்கப்பட்டுள்ள 1.5 பில்லியன் டொலர் நிதி வசதியை செயற்படுத்துவதற்கும், 1.5 பில்லியன் டொலர் கடன் வசதியைப் பெறுவதற்கும் சீனா எதிர்பார்க்கிறது.

சீனா இலங்கைக்கு கடன் வழங்கும் முக்கிய நாடாக கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »