Our Feeds


Saturday, July 30, 2022

SHAHNI RAMEES

பணவீக்கம் 75 வீதமாக உயரக்கூடும்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை




 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் வரையிலான 12 மாதங்களில் இலங்கையின் பணவீக்கம் 60.8 வீதமாக அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


இரண்டு வருட பண அச்சிடும் நடவடிக்கையின் பின்னர் நாணயத்தின் வீழ்ச்சிக் காரணமாகவே இந்த பணவீக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


இதேவேளை 12 மாதங்களில் உணவுக் குறியீடு 90.9 சதவீதமாக இருந்தது.


2015 ஆம் ஆண்டிலிருந்து ஏற்பட்ட நாணய நெருக்கடியின் வெளியீட்டு இடைவெளியை நிரப்புவதற்காக கடந்த இரண்டு வருடங்களாக இலங்கையின் மத்திய வங்கி பணத்தை அச்சிட்டுள்ளது.


இதன் காரணமாக அமெரிக்க டொலர் 200ல் இருந்து 360 ஆக வீழ்ச்சியடைந்துள்ளது.


இதேவேளை பணவீக்கம் 75 சதவீதமாக உயரக்கூடும் என்று மத்திய வங்கி கூறியுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »