Our Feeds


Saturday, July 30, 2022

SHAHNI RAMEES

கொழும்பின் சில பகுதிகளுக்கான நீர்விநியோகம் இன்றிரவு முதல் இடைநிறுத்தம்....!

 



கொழும்பின் சில பகுதிகளில் இன்றிரவு

முதல் நாளை காலை வரை நீர் விநியோகத்தடை அமுலாக்கப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.


அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக இவ்வாறு நீர்விநியோகத்தடை அமுலாக்கப்படவுள்ளது.


இதன்படி இன்றிரவு 9 மணி முதல் நாளை காலை 8 மணி வரை, கொழும்பு 09, 10, 11 மற்றும் 12 ஆகிய பகுதிகளில் 11 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்பட உள்ளதாக நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »