குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின், ஒரு நாள் சேவையின் கீழ் கடவுச்சீட்டு வழங்கும் பணிகள் நாளை முதல் 3 பிராந்திய அலுவலகங்களில் முன்னெடுக்கப்படவுள்ளது.
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது.
இதன்படி, மாத்தறை, வவுனியா, மற்றும் கண்டி ஆகிய பிராந்திய அலுவலகங்களில் ஒரு நாள் சேவையின் கீழ் கடவுச்சீட்டு வழங்கும் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
முதற்கட்டமாக ஒவ்வொரு பிராந்திய அலுவலகங்களிலும் முன்கூட்டியே பதிவு செய்த 100 பேருக்கு மாத்திரம் இந்தச் சேவை வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
