Our Feeds


Sunday, July 3, 2022

ShortNews

கிளிநொச்சியில் வீடு ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பெருந்தொகை எரிபொருள் கைப்பற்றப்பட்டன!



(கரைச்சி நிருபர்)


கிளிநொச்சியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 31 பெரல் டீசல் ஒரு பெரல் பெற்றோல் 25 லீற்றர் மண்ணெண்ணெய் கைப்பற்றப்பட்டுள்ளன.


கிளிநொச்சி ஏ-9 வீதி அருகில் உள்ள வீடு ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில் பொலிஸாரினால் இன்று (03) காலை இவை கைப்பற்றப்பட்டுள்ளன

கிளிநொச்சி பொலிஸ் புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய குறித்த வீட்டைச் சுற்றிவளைத்த பொலிஸார் இவற்றைக் கைப்பற்றியுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »