Our Feeds


Wednesday, July 27, 2022

SHAHNI RAMEES

ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ கொடியுடன் மாயமான நபரை தேடி பொலிஸார் களத்தில்..!




கொழும்பில் அண்மையில் இடம்பெற்ற

மக்கள் போராட்டத்தின் போது ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ கொடியை ஏந்திய நபர் ஒருவரை கைது செய்ய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.



சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட ஒரு வீடியோவில் , அவர் படுக்கையில்  படுத்திருக்கும் கொடியை பெட்ஷீட்டாகப் பயன்படுத்துவதைக் காட்டுகிறது.



ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ கொடியை தீயிட்டு அழிப்பதாகவும் அவர் கூறியதாகக் கூறப்படுகிறது.



ஜூலை 09 ஆம் திகதி கொழும்பில் உள்ள ஜனாதிபதி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதன் பின்னர் கொடியை எடுத்துச் சென்ற நபர் சிசிடிவி காட்சிகள் மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.



சந்தேக நபர் கொடியை இடுப்பில் கட்டிக்கொண்டு நடமாடுவதைக் காணக்கூடியதாகத் தெரிவித்த பொலிஸார், சிசிடிவி ஆதாரங்களின் அடிப்படையில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »