Our Feeds


Thursday, July 28, 2022

SHAHNI RAMEES

போராட்டகள இளைஞர்களின் ஆட்சி மாற்றக் கோரிக்கையை நானும் ஏற்றுக் கொள்கிறேன்! -ஜனாதிபதி ரணில்

 

நாட்டின் சட்டத்துக்கு அமைவாக அமைதியான முறையில் போராட்டங்களில் ஈடுபடுவதற்கு அனைவருக்கும் அனுமதியுள்ளது. போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களின் கோரிக்கையாகக் காணப்பட்ட ஆட்சி முறைமை மாற்றதை தானும் ஏற்றுக் கொள்வதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

கோட்டையிலுள்ள உள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

நாட்டில் ஆட்சி முறைமையை மாற்ற வேண்டும் என்பதே போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இளைஞர்களின் கோரிக்கையாக இருந்தது. அதனை தானும் ஏற்றுக் கொள்வதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.


 


 

நாட்டின் சட்டத்துக்கு அமைவாக அமைதியான முறையில் போராட்டங்களில் ஈடுபடுவதற்கு அனைவருக்கும் அனுமதியுள்ளது என்றும், பல்வேறு திறமைகளைக் கொண்ட இளைஞர்களும் போராட்டத்தில் பங்கேற்றிருந்ததை தாம் கண்டதாகவும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார் .

நாடு மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் இருந்த வேளையில் தான் பதவியேற்றதாக தெரிவித்த ஜனாதிபதி , பொருளாதார சவாலை முறியடித்து நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு பல நடவடிக்கைகளை தற்போது எடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »