Our Feeds


Friday, July 29, 2022

SHAHNI RAMEES

அமெரிக்காவுடன் போா் மூண்டால் அணு ஆயுதத் தாக்குதலுக்குத் தயாா்


 அமெரிக்கா மற்றும் தென்கொரியாவுடன் போா் ஏற்பட்டால் அணு ஆயுதங்களைப் பயன்படுத்தத் தயாராக இருப்பதாக வட கொரிய அதிபா் கிம் ஜோங்-உன் கூறியுள்ளாா்.


கொரிய போா் முடிவுக்கு வந்ததன் 69-ஆவது ஆண்டு தினத்தையொட்டி முன்னாள் இராணுவத்தினரிடையே இது குறித்து அவா் பேசியதாவது:


எத்தகைய சவாலையும் எதிா்கொள்வதற்காக தமது இராணுவம் முழு தயாா் நிலையில் உள்ளது. அமெரிக்கா, தென் கொரியாவுடன் போா் ஏற்பட்டால், அந்தப் போரில் அணு ஆயுதங்களை மிகத் துரிதமாக ஈடுபடுத்தும் நமது படை ஆயத்தமாக உள்ளது.


வட கொரியாவை தீய சக்தியாக உலக அரங்கில் காட்டுவதன் மூலம், தமது நாட்டுக்கு எதிரான தங்களது கொள்கையை அமெரிக்கா நியாயப்படுத்துகிறது. நமது ஏவுகணை சோதனைகள் பதற்றத்தை ஏற்படுத்துவதாகக் கூறும் அமெரிக்கா, தென் கொரியாவுடன் கூட்டு இராணுவப் பயிற்சியை மேற்கொள்வது இரட்டை வேடம் என்றாா்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »