Our Feeds


Wednesday, July 27, 2022

SHAHNI RAMEES

கோட்டாவுக்கு வழக்கு, ரனில், வழக்கிலிருந்து விடுவிப்பு - காரணம் என்ன?

 

தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு காரணமானவர்கள் தொடர்பில் விசாரணை நடத்துமாறு அரசாங்கத்திற்கு உத்தரவிடுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவில் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பெயரை அதிலிருந்து நீக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான ஐவரடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழுவினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த மனுவில் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக மனுதாரர்கள் ஆட்சேபனை தெரிவிக்காததால் அவரை விடுதலை செய்யுமாறு மனுதாரர் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி சாந்தக ஜயசுந்தர நீதிமன்றில் கோரிக்கை விடுத்தார்.

இந்த கோரிக்கையை ஏற்ற நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் சந்திரா ஜயரத்னவினால் இந்த மனு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »