எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கு இளைஞர்களை
ஒன்று திரட்டி இரண்டாம் தலைமுறை தலைவராக தம்மை முன்னிறுத்தப் போவதாகவும், அதிகாரத்தை கைப்பற்ற போவதாகவும் மக்கள் விடுதலை முன்னணியின் ஸ்தாபகர் ரோஹன விஜேவீரவின் மகன் உவிந்து விஜேவீர தெரிவித்துள்ளார்.இணைய ஊடகமொன்றின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கான திட்டங்கள் குறித்து பல்வேறு விடங்களை கூறியுள்ளதுடன், தனது தந்தையால் உருவாக்கப்பட்ட மக்கள் விடுதலை முன்னணி தொடர்பில் பல குற்றச்சாட்டுகளையும் அவர் முன்வைத்திருந்தார்.