Our Feeds


Saturday, July 2, 2022

SHAHNI RAMEES

PHOTOS: நாட்டின் பல பகுதிகளில் கடல் கொந்தளிப்பு; காலியில் அதிக பாதிப்பு!

 

நாட்டின் பல பகுதிகளில் இன்று (02) கடல் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.

தெஹிவளை, காலி, அம்பலாங்கொடை கடற்பிரதேசங்களில் கடல் கொத்தளிப்பு அதிகமாக ஏற்பட்டுள்ளது.

இன்று (02) மாலை கடல் அலைகள் கரையை நோக்கி வந்ததால் காலி துறைமுக பொலிஸ் சுங்கம் உள்ளிட்ட பல இடங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

கரையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பல மீனவப் படகுகளும் அலைகளினால் நிலப்பகுதியை நோக்கி ஒதுங்கின.


அத்துடன் காலி -மாத்தறை பிரதான வீதியின் போக்குவரத்தும் தடைப்பட்டுள்ளது.


சமுத்திர மாவத்தையின் கரையும் சேதமடைந்துள்ளதுடன், நிலவும் பலத்த காற்றுடன் கடல் அலைகள் கரையை நோக்கி பாய்ந்துள்ளன.












Subscribe to this Blog via Email :
Previous
Next Post »