Our Feeds


Wednesday, July 27, 2022

SHAHNI RAMEES

#UPDATE: தானிஸ் அலிக்கு விளக்கமறியல்...!




ஜுலை 13ஆம் திகதி, இலங்கை

ரூபவாஹினி கூட்டுத்தாபனத்துக்குள் பலவந்தமாக நுழைந்து, ஒளிபரப்புக்கு இடையூறு ஏற்படுத்தியமை தொடர்பில் கைதுசெய்யப்பட்ட தனிஸ் அலி என்பவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


டுபாய் செல்ல முயற்சித்த நிலையில், கட்டுநாயக்க விமான நிலையத்தில் விமானத்தினுள் வைத்து குற்றப் புலனாய்வு பிரிவினரால் அவர் நேற்று கைதுசெய்யப்பட்டார்.


கடந்த 13ஆம் திகதி சில தரப்பினர் இலங்கை ரூபவாஹினி கூடடுத்தாபனத்திற்குள் பலவந்தமாக நுழைந்து ஒளிபரப்புக்கு இடையூறு ஏற்படுத்தியிருந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.


இந்நிலையில், குறித்த நபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியதைத் தொடர்ந்து ஓகஸ்ட் 8ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »