சர்வகட்சி அரசாங்கத்தில் இணைந்து கொள்வதற்கான அழைப்பு தமக்கு கிடைக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பு விகாரமஹாதேவி பூங்காவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.