Our Feeds


Saturday, August 20, 2022

SHAHNI RAMEES

20 இலட்சம் ரூபா பெறுமதியான கறுப்பு பொன்நிற கற்களுடன் ஒருவர் கைது..!





புதையல் அகழ்வில் தோண்டி எடுக்கப்பட்ட

தங்கம் என கூறி விற்பனை செய்ய முயன்ற சந்தேகநபர் கல்முனை விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.


அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கோரக்களப்பு குளத்திற்கருகில் தகவல் ஒன்றிற்கு அமைய சம்பவ தினமான நேற்று (19) மாலை கல்முனை விசேட அதிரடிப்படையினரால் இந்த கைது சம்பவம் இடம்பெற்றுள்ளது.


24 வயதுடைய கோமாரி பகுதியை சேர்ந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் சந்தேக நபர் வசம் இருந்து ரூபா 20 இலட்சம் பெறுமதியான 350 துண்டுகள் அடங்கிய 113 கிராம் 180 மில்லி கிராம் எடையுடைய ஒரு தொகுதி கறுப்பு பொன்நிற கற்கள் கல்முனை விசேட அதிரடிப்படையினரால் மீட்கப்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »