Our Feeds


Saturday, August 27, 2022

ShortTalk

கம்பஹா சிகை அலங்கார நிலைய துப்பாக்கிச் சூட்டு சம்பவம்: 4 ஆண்கள், 2 பெண்கள் கைது!



(எம்.வை.எம்.சியாம்)


கம்பஹா பிரதேசத்தில் உள்ள சிகை அலங்கார நிலையத்தில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய 6 பேர் நேற்று (26) கொனஹென விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.


கடந்த 6 ஆம் திகதி கம்பஹா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள சிகை அலங்கார நிலையமொன்றில் இனம் தெரியாத நபர்களால் துப்பாக்கி சூடு மேற்கொள்ளப்பட்டது. இந்தச் சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டார்.

இந்நிலையில் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் 6 பேர் கொனஹென விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதோடு அவர்களில் நான்கு ஆண்களும் இரண்டு பெண்களும் உள்ளங்குடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்கள்.

கைது செய்யப்பட்டவர்கள் 23,24,26, 29 மற்றும் 39 வயதுடையவர்கள் எனவும் அவர்கள் பெதியகொட, மாகேவிட மற்றும் கொடுகொட பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளார்கள்.

சந்தேக நபர்களிடமிருந்து துப்பாக்கி மற்றும் கார் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளதுடன் அவர்கள் கம்பஹா நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் கொனஹென விசேட அதிரடிப்படையினர் மற்றும் கம்பஹா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர் .

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »