Our Feeds


Monday, August 22, 2022

SHAHNI RAMEES

முன்னாள் பிரதியமைச்சர் நூர்தீன் மசூரின் வீட்டை உடைத்து திருடிய ஐவர் புத்தளம் பொலிஸாரினால் கைது!

 

முன்னாள் பிரதியமைச்சர் நூர்தீன் மசூரின் புத்தளம் நாகவில்லு பகுதியில் உள்ள வீட்டை கடந்த 2 ஆம் திகதி உடைத்து 160 இலட்சம் ரூபாவுக்கு மேற்பட்ட தங்கம் நகைகள் பணம் மற்றும் பொருட்களை திருடிய சந்தேகத்தில் ஐவர் புத்தளம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.



சந்தேக நபர்களிடமிருந்து திருடப்பட்ட ஒரு தொகுதி பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.



இந் திருடடுச் சம்பவத்துடன் மேலும் இருவர் தொடர்புபட்டிருப்பதாகவும் அவர்களைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.



சந்தேக நபர்களிடம் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »