Our Feeds


Tuesday, August 2, 2022

ShortTalk

சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை பெற்றால் பல மக்கள் நலன் சேவைகளை ரத்து செய்ய வேண்டிவரும் - முன்னாள் மத்திய வங்கி ஆளுனர்



இலங்கையின் அனைத்து பிரச்சினைகளுக்கும் சர்வதேச நாணய நிதியம் தீர்வாகாது என மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.


சத்தியக்கடதாசி ஒன்றின் மூலம் அவர் இந்த விடயத்தை உச்சநீதிமன்றிற்கு அறிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டின் அனைத்து பிரச்சினைகளுக்கும் சர்வதேச நாணய நிதியம் தீர்வு வழங்கும் என கருதுவது ஓர் மாயை. சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை பெற்றுக்கொண்ட பல நாடுகள் அழிவடைந்துள்ளன.

சர்வதேச நாணய நிதியத்தின் உதவி பெற்றுக்கொள்ள வேண்டுமாயின் வரியை அதிகரித்தல், மக்களுக்கு வழங்கப்படும் நலன்புரிகள் அனைத்தையும் ரத்து செய்தல் அல்லது மட்டுப்படுத்தல் உள்ளிட்ட மக்களுக்கு பாதகம் ஏற்படுத்தக் கூடிய பல தீர்மானங்களை எடுக்க நேரிடும்.

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் என்ற பதவியை வகித்த போது சட்ட ரீதியாக சரியான தீர்மானங்களை மட்டுமே தாம் எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »