Our Feeds


Monday, August 29, 2022

ShortTalk

புதியு கூட்டமைப்பு உருவாக்கம் : மைத்திரிபால சிறிசேனவின் அதிரடி நடவடிக்கை



ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையில் இடதுசாரி கட்சிகளை இணைத்துக்கொண்டு கூட்டமைப்பொன்றை கட்டியெழுப்ப எதிர்பார்த்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதியும், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன தெரிவிக்கின்றார்.


இவ்வாறு அமைக்கப்படும் கூட்டமைப்பு, எதிர்வரும் காலத்தில் ஆட்சி பீடத்தை அமைக்கவுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.

மஹரகம பகுதியில் நேற்று (28) இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தொகுதி கூட்டத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவே தற்போது ஆட்சியை முன்னெடுத்து செல்கின்றமையினால், தனக்கு பிரதமர் பதவி வழங்கப்படும் பட்சத்தில், தான் அதனை பொறுப்பேற்க தயார் இல்லை எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.

அத்துடன், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை பிரதிநிதித்துவப்படுத்துவோர் அமைச்சு பொறுப்புக்களை ஏற்க தயார் கிடையாது எனவும் மைத்திரிபால சிறிசேன தெரிவிக்கின்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »