மின் கட்டணம் 75% இனால் அதிகரிக்கப்பட்ட போதும் மின்சார சபை நட்டத்தில் இயங்குவதாக மின்சார பொறியியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதனால் விரைவில் 25 % இனால் மின் கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் என அந்த சங்கம் கூறியுள்ளது.
மின் கட்டணத்தை அதிகரித்த பின்னரும் மின்சார சபை 25 ஆயிரம் கோடி நட்டத்தில் இயங்குவதாக மின்சார பொறியியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.