ரம்புக்கனை எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் இடம்பெற்ற சம்பவத்தில் நபர் ஒருவரை சுட்டுக் கொன்ற குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு கேகாலை மேல் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.
சம்பவம் தொடர்பில் கேகாலை முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கே. பி. கீர்த்திரத்ன மற்றும் நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்களையும் கைது செய்து விளக்கமறியலில் வைக்குமாறு கேகாலை நீதவான் நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டிருந்தது.
ஏப்ரல் 19ஆம் திகதி, ரம்புக்கனை எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் ஆரம்பிக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது, பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பிள்ளைகளின் தந்தை கொல்லப்பட்டதுடன், மற்றுமொருவர் காயமடைந்தார்.