Our Feeds


Monday, August 8, 2022

SHAHNI RAMEES

ஐக்கிய மக்கள் சக்தியின் தொகுதி அமைப்பாளர் பிணையில் விடுதலை..!

 


கடந்த மே மாதம் 9ம் திகதி இடம்பெற்ற வன்முறை

சம்பவம் தொடர்பில் கைதான ஐக்கிய மக்கள் சக்தியின் கெஸ்பெவ தொகுதி பிரதான அமைப்பாளர் கயான் டி மெல் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.


பிலியந்தலை பகுதியில் வைத்து அவர் இன்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.


சந்தேகநபர் அன்றைய தினம் இடம்பெற்ற 6 வன்முறைச் சம்பவங்களில் முன்னின்று செயற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.


இதற்கமைய, அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.


இந்தநிலையில் சந்தேகநபர் கெஸ்பேவ நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டமையை அடுத்து அவருக்கு பிணை வழங்கப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »