Our Feeds


Monday, August 1, 2022

ShortTalk

கோட்டாபய எப்போது வேண்டுமானாலும் இலங்கை வரலாம், பாதுகாப்பு கொடுப்பது இலங்கை அரசின் கடமை - சாகர காரியவசம்



முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ மீண்டும் நாடு திரும்பி அரசியலில் ஈடுபட விரும்பினால் அதனை வரவேற்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.


கொழும்பில் இன்று (01) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் இதனைத் தெரிவித்துள்ளார்.

பொதுஜன பெரமுனவின் தலைவராக மஹிந்த ராஜபக்க்ஷ தொடர்ந்தும் செயற்படுவார் எனவும் சாகர காரியவசம் கூறினார்.

தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், எப்போது வேண்டுமானாலும் இலங்கைக்கு வர அவருக்கு முழு உரிமை உண்டு. அவர் இலங்கைப் பிரஜை. ஒரு பிரஜை என்ற வகையிலும், முன்னாள் ஜனாதிபதி என்ற வகையிலும் அவருக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் பாதுகாப்பையும் வழங்குவதற்கு இலங்கை அரசாங்கத்துக்கு முழுப் பொறுப்பு உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »