ஒரு தனி நபரின் கொள்கைகளை அமுல்படுத்துவதற்கு அல்லது நியாயப்படுத்துவதற்காக சர்வகட்சி அரசாங்கத்திற்கு ஆதரவளிக்க முடியாது என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
களுத்துறையில் இடம்பெற்ற நிகழ்ச்சியொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
மேலும்,சிதைக்கப்பட்ட நாடாளுமன்றத்தை திருத்துவதற்கு பொதுத்தேர்தல் தேவை எனவும் சுட்டிக்காட்டினார்.