Our Feeds


Thursday, August 11, 2022

SHAHNI RAMEES

இப்பலோகம பிரதேசத்தில் கசிப்பு அருந்திய நால்வர் மரணம்!


 இப்பலோகம பிரதேசத்தில் கசிப்பு அருந்திய  நால்வர் இரு தினங்களில் திடீரென உயிரிழந்துள்ளதாக இப்பலோகம பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சகோதரர்களான கல்வங்குவ இபலோகமவைச் சேர்ந்த  38 வயதான நபர் கெக்கிராவ வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். 


அவரது சகோதரரான அதே பகுதியைச் சேர்ந்த 39 வயதானவர் அநுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.


பஹல வேம்புவ பகுதியைச் சேர்ந்த 66 வயதுடைய ஒருவர் தனது வீட்டில் உயிரிழந்துள்ளார். 


அளுத்தம்பேவதனைச் சேர்ந்த  65) என்பவரும் அவரது வீட்டிலேயே அவர் உயிரிழந்துள்ளார்.


இவர்கள் நால்வரும் கசிப்பு தயாரித்து அருந்தியவர்கள் என்றும் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் இப்போலகம பொலிஸார் தெரிவித்தனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »