முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மீண்டும் இலங்கைக்கு திரும்புவதற்கு வசதிகளை செய்து தறுமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இன்று மாலை இடம்பெற்ற கலந்துரையாடலின் போது ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான்ன இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.