காலிமுகத்திடல் பகுதியில் சட்டவிரோதமான முறையில் தங்கியிருப்பவர்களை ஓகஸ்ட் 5ஆம் திகதிக்கு முன்னதாக அங்கிருந்து வெளியேற வேண்டுமென பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
அதற்கமைய, காலிமுகத்திடல் மற்றும் அதனை அண்மித்த நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு சொந்தமான பகுதிகளில் இருந்து வெளியேறுமாறு கோட்டை பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
போராட்டத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ள இடங்களில் மாத்திரம் போராட்டங்களை முன்னெடுக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு பொலிஸ் ஊடகப்பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.