முன்னாள் ஜனாதிபதி கோட்டாவினால் ஞானசார தேரர் தலைமையில் நியமிக்கப்பட்ட “ஒரே நாடு ஒரே சட்டம்” செயலணியின் சிபாரிசுகள் அடங்கிய அறிக்கையை தான் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை எனவும், அது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படமாட்டாது எனவும் ஜனாதிபதி ரனில் விக்கிரமசிங்க ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் MP யுமான ரவுப் ஹக்கீமிடம் உறுதியளித்தார்.
நேற்றைய தினம் ஜனாதிபதி ரனிலுடன் இடம்பெற்ற முக்கிய சந்திப்பின் போது “ஒரே நாடு ஒரே சட்டம்” செயலணி தொடர்பில் ரவுப் ஹக்கீம் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.