Our Feeds


Tuesday, August 30, 2022

SHAHNI RAMEES

சிரேஷ்ட DIG தென்னகோன் மீதான தாக்குதல்: சந்தேக நபர்கள் மூவர் கைது..!

 

கடந்த மே மாதம் 10 ஆம் திகதி கொள்ளுபிட்டி பொலிஸ் பிரிவில் மேல்மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் உட்பட மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்களை தாக்கி காயப்படுத்திய சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் மூவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

கைதான சந்தேகநபர்கள் கொழும்பு 15 மற்றும் பிடபத்தர பிரதேசங்களில் வசிப்பவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸ் அதிகாரிகளைத் தாக்கியமை, சட்டவிரோதமாக மக்களை ஒன்றுகூட்டியமை மற்றும் சட்டத்தை மீறியமை ஆகிய குற்றச்சாட்டுக்களின் கீழ் அவர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »