பாண் உள்ளிட்ட பேக்கரி பொருட்களுக்குப் பயன்படுத்தப்படும் கோதுமை மாவுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன தெரிவித்தார்.
எரிபொருள் நெருக்கடியால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், திருகோணமலையிலிருந்து கொழும்புக்கு 50 கிலோகிராம் கோதுமை மா மூடையை கொண்டு செல்லும் போது ஒரு மூடைக்கு 300 ரூபா மேலதிகமாக அறவிடப்படுவதாகவும் குறிப்பிட்டார்.
திருகோணமலையில் இருந்து மருதானைக்கு கடந்த காலங்களில் ரயிலில் கோதுமைமா கொண்டு செல்லப்பட்டதாகவும், தற்போது ரயிலில் கோதுமைமா கொண்டு செல்வது நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.