கடந்த சில தினங்களாக பொழிந்து வரும் கடும் மழையின் காரணமாக நாவலப்பிட்டி மற்றும் ஏனைய கிராமங்களில் கடுமையாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவு கரம் வழங்கும் முகமாக அக்குறனை பிரதேச சபை தவிசாளர் இஸ்திஹார் இமாதுதீன் அவர்களினால் ஒரு தொகை (100) மெத்தைகள் அன்பளிப்புச் செய்யப்பட்டன.
குறித்த மெத்தைகள் நேற்றைய தினம் நாவலப்பிட்டி டவுன் பள்ளிவாயலில் வைத்து வெள்ள நிவாரண குழுவிடம் கையளிக்கப்பட்டன.
மேலும் இந்த வெள்ள நிவாரணப் பணிகளை தொடர்ந்தும் எவ்வாறு கொண்டு செல்வது என்பது குறித்தும், சேதம் அடைந்த வீடுகளை புனர்நிர்மாணம் செய்வது தொடர்பிலும் வெள்ள நிவாரண குழுவின் முக்கியஸ்தர்களுடன் கலந்துரையாடல் ஒன்றும் நடைபெற்றது. இதன் பொழுது, வெள்ள நிவாரண பணிகளுக்கு தொடர்ந்தும் பங்களிக்க தயாராக இருப்பதாக அக்குறணை பிரதேச சபை தவிசாளர் அவர்கள் வெள்ள நிவாரண குழுவினரிடம் உறுதி அளித்தார்.