-சுரேன் சந்திரன்
நாட்டில் ஏற்பட்டுள்ள பாரிய பொருளாதார சூழ்நிலை காரணமாக பல்வேறுதரப்பினர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் பெண்கள் தலைமைத்துவம் உள்ள குடும்பங்கள் அதிகளவில் சொல்லொண்ணாத் துயரங்களை அனுபவித்துவருகிறார்கள்.
அதில் உச்சக்கட்டமாக இப்பெண்கள் தங்களுடைய குழந்தைகளுக்கு ஒரு நேர உணவினை கூட வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலைமையை கருத்தில் எடுத்து கலாநிதி. வி.ஜனகன் அவர்களின் திட்டமிடல் மற்றும் ஏற்பாட்டின் அடிப்படையில் பெண்கள் தலைமைத்துவம் உள்ள குடுப்பங்களுக்கன உதவி வழங்கும் செயற்திட்டம் கொழும்பில் பல்வேறு பிரதேசங்களில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அதன் ஒரு கட்டமாக நேற்றைய தினம் கொழும்பு, புதுச்செட்டித்தெரு வியாகுலமாத கிறிஸ்தவ தேவாலயம் பிரதேசத்தில் 150 மேற்பட்ட பெண்கள் தலைமைத்துவ குடும்பங்களுக்கு உலர் உணவுபொதிகள் வழங்கப்பட்டது.
இன் நிகழ்வினை சர்வதேச இசைக் கல்விக்கான பயிற்சி நிலையத்தின் இலங்கை தூதுவருமான அருட்கலாநிதி எஸ். சந்ரு பெர்னாண்டோ ஒழுங்கமைப்புச் செய்திருந்தார்.