ஜனாதிபதி மற்றும் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்களுக்கிடையிலான கலந்துரையாடல் நாளை (09) பிற்பகல் நடைபெறவுள்ளதுடன், சர்வகட்சி அரசாங்கம் அமைப்பதற்கு ஆதரவளிக்கப் போவதில்லை என அக்கட்சி ஏற்கனவே அறிவித்துள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்த மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் குழு உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி, குறிப்பாக தற்போது அரசாங்கம் அமைக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி அரசாங்கத்தை அமைத்து முடித்துவிட்டார். இப்போது சர்வகட்சி பேச்சுவார்த்தையில் எந்த பயனும் இல்லை.
அந்த சர்வகட்சி அரசாங்கத்தில் நாங்கள் பங்கேற்க மாட்டோம் என அவர் தெரிவித்துள்ளார்.