Our Feeds


Saturday, September 3, 2022

ShortNews Admin

என்ன நடக்கிறது இலங்கையில்? - 4 மாதங்களுக்குள் 30 பேர் சுட்டுக் கொலை; மேல் மாகாணத்தில் 18, தென் மாகாணத்தில் 12



(எம்.எப்.எம்.பஸீர்)


பாதாள உலகம் மற்றும் போதைப்பொருள் கடத்தல் பிரச்சினைகளை மையப்படுத்தியதாக, கடந்த மூன்று மாதங்களுக்குள் 30 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.


பொலிஸ் தலைமையக தகவல்களின் படி, மேல் மாகாணத்தில் 18 பேரும், தென் மாகாணத்தில் 12 பேரும் இவ்வாறு சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

26 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களிலேயே இந்த 30 பேரும் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகத்தின் தகவல்கள் தெரிவித்தன.

மே 31 முதல் ஆகஸ்ட் 31 வரையிலான காலப்ப குதியில் இந்த சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »