Our Feeds


Sunday, September 11, 2022

SHAHNI RAMEES

#AsiaCupFinal பாகிஸ்தான் அணிக்கு 171 ஓட்டங்கள் வெற்றி இலக்கு

 

ஆசிய கிண்ண கிரிக்கட் தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.

இந்நிலையில், போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கட்டுக்களை இழந்து 170 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இலங்கை அணி சார்பாக பானுக ராஜபக்ஷ ஆட்டமிழக்காமல் 71 ஓட்டங்களையும் வனிந்து ஹசரங்க 36 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சில் ஹரிஸ் ரவூப் 3 விக்கட்டுக்களை கைப்பற்றியுள்ளார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »