பிற சக்திகள் மூலம் பேலியகொட மெனிங் வியாபாரத் தொகுதியை வெவ்வேறு மோசமான விடயங்களுக்குப் பயன்படுத்துவதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு மோசமான நடவடிக்கைகளில் ஈடுபடுகுன்ற நபர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கும்படியும் பொலிஸாரை அவர் அறிவுறுத்தினார்.
பேலியகொட விற்பனைத் தொகுதியில் நிலவும் முக்கிய பிரச்சினைகள் பற்றி நகர அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகள் மற்றும் பேலியகொட விற்பனையாளர்கள் சங்கத்துடன் நேற்று சனிக்கிழமை நகர அபிவிருத்தி அதிகார சபை கேட்போர் கூடத்தில் நடந்த கலந்துரையாடலின் போதே அமைச்சர் இந்த விடயங்களைக் கூறினார்.
வியாபாரத் தொகுதியின் கடைகள், வாகனத் தரிப்பிடம், மலசல கூடம், மின்சாரம், நீர் உள்ளிட்ட வசதிகளைக் கொடுக்கும் போது ஏற்படுகின்ற முக்கிய பிரச்சினைகள் பற்றியும் இங்கு கலந்துரையாடப்பட்டது.
பேலியகொட மெனிங் வியாபாரத் தொகுதியை அதிக இலாபம் பெறும் ஒன்றாக மாற்றுவதற்குத் தேவையான நடவடிக்கைகள் தாமதமின்றி எடுக்கப்பட வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அமைச்சர்உத்தரவிட்டார்.
பேலியகொட வியாபாரத் தொகுதி புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தப்படுகின்ற ஒரு இடமாக மாற்றப்பட வேண்டும் என்றும் அதற்கு மெனிங் சந்தையில் உள்ள வியாபாரிகள் ஒத்துழைக்க வேண்டும் என்றும் அமைச்சர் கேட்டுக் கொண்டார்.
கொழும்பு நகரத்தில் காணப்படும் அதிக வாகன நெரிசலுக்குரிய தீர்வாக, கொழும்பு மெனிங் சந்தையும் மீன் சந்தையும் பேலியகொடவுக்கு 2013 ஆம் ஆண்டு கொண்டு செல்லப்பட்டது.
பேலியகொட மெனிங் சந்தைத் தொகுதி 13.5 ஏக்கர் பகுதியில் இருக்கின்ற மொத்த விற்பனைத் தொகுதியாகும். இதை நிர்மாணிப்பதற்கு 6.5 பில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது. இந்த சந்தைத் தொகுதியில் 1,169 விற்பனை அலகுகள் உள்ளன.