சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியா செல்வதற்கு படகு வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்த ஐவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது.
காத்தான்குடி முத்துரான் கடற்கரையில் மேற்கொள்ளப்பட்ட நான்கு சுற்றிவளைப்புகளில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்களுக்கு போக்குவரத்து வசதிகளை வழங்குவதற்காக பயன்படுத்தப்பட்ட ஐந்து டிங்கி படகுகளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
சந்தேக நபர்கள், அவுஸ்திரேலியாவுக்கு ஒருவரை சட்டவிரோதமான முறையில் ஏற்றிச் செல்வதற்காக 10 இலட்சம் முதல் 15 இலட்சம் ரூபா வரை பெற்றுள்ளதாக விசாரணைகளின் போது தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் களுவாஞ்சிக்குடி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.