மறைந்த பிரித்தானிய மகாராணி எலிசபெத்தின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக இங்கிலாந்து சென்றிருந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட குழுவினர் நாடு திரும்பியுள்ளனர்.
ஜனாதிபதி தனது விஜயத்தை முடித்துக் கொண்டு இன்று (21) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
டுபாயிலிருந்து EK 650 என்ற எமிரேட்ஸ் எயார்லைன்ஸ் விமானத்தின் மூலம் ஜனாதிபதி மற்றும் அவரது குழுவினர் காலை 08.23 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.