மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெள்ளக்கல்லு மலைப்பகுதியில் உள்ள நீர் ஓடையில் மூழ்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குசலானமலை பகுதியைச் சேர்ந்த ஐந்து பிள்ளைகளின் தந்தையான சித்திரவேல் சிறிகந்தராஜா வயது (58) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில, சம்பவ இடத்திற்கு பொலிஸார் மற்றும் திடீர் மரண விசாரணை அதிகாரி உள்ளிட்டவர்கள் சென்று மரண விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
சடலம் செங்கலடி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டுச்செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.