Our Feeds


Saturday, September 17, 2022

SHAHNI RAMEES

மட்டக்களப்பில் பாரியளவிலான வெடிப்பொருட்கள் மீட்பு..!

 

வாகரை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கதிரவெளி பால்சேனை பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினால் புதைக்கப்பட்ட ஆயுதங்கள் இன்று வெள்ளிக்கிழமை கண்டுபிடிக்கப்பட்டதாக வாகரை பொலிஸார் தெரிவித்தனர்.



இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் வாழைச்சேனை நீதிவான் நீதிமன்ற உத்தரவுக்கமைய வாகரை பொலிஸாரின் உதவியுடன் குறித்த பிரதேசத்தில் ஆயுதங்களை கண்டுபிடிக்கும் நடவடிக்கை அகழ்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது 200 ஜி.பி.எம்.ஜி. ரவைக் கோர்வை, 750 ஜி.பி.எம்.ஜி. தோட்டாக்கள்,  50 கலிபர் ரவை, பெராக் குண்டு, 07 ஏ.கே ரவைக் கூடுகள், கைக்குண்டு,  கண்ணிவெடி,  எறிகணை போன்ற பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் தொடர்பான விசாரனைகள் இடம்பெறுவதாகவும் பொலிஸார் மேலும்  தெரிவித்தனர்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »