தாய்வானுக்கு 1.1 பில்லியன் டொலர் பெறுமதியான ஆயுதங்களை விற்பனை செய்வதற்கு அமெரிக்கா இணங்கியுள்ளது.
இது சீனாவின் கோபத்தை அதிகரிக்கும் என தெரிவிக்கப்படுகிறது.
முன்மொழியப்பட்டுள்ள ஒப்பந்தத்துக்கு அமைய கடல் மற்றும் வான் மார்க்கமாக நடத்தப்படும் தாக்குதலுக்கு எதிராக தாக்குதல்களை நடத்தக் கூடிய ஏவுகணைகள் மற்றும் கண்காணிப்பு கருவிகள் என்பன இதில் அடங்குகின்றன.
அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் நான்சி பெலோசி கடந்த மாதம் தாய்வானுக்கு விஜயம் மேற்கொண்டிந்தநிலையில் இந்த புதிய ஆயுத விற்பனை நடவடிக்கை அமுக்கு வருகிறது.
இந்தநிலையில் குறித்த செயற்பாட்டுக்கு சீனா எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளது.
குறித்த ஒப்பந்தம் மீள பெறப்பட வேண்டும் என வோஷிங்டனில் உள்ள சீன தூதரகம் வலியுறுத்தியுள்ளது.
அவ்வாறு இல்லாவிட்டால் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு தயாராக வேண்டும் எனவும் அமெரிக்காவுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
இந்த இணக்கப்பாடு அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவை கடுமையாக பாதிப்பதாக அமெரிக்காவில் உள்ள சீன தூதரகத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.