Our Feeds


Sunday, September 18, 2022

SHAHNI RAMEES

கச்சா எண்ணெய் விலை - தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் விடுத்துள்ள கோரிக்கை..!



உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்து

வரும் பின்னணியில் இலங்கையில் எரிபொருளின் விலை குறைக்கப்படாமை தொடர்பில் அரசாங்கம் உண்மைகளை தெளிவுபடுத்த வேண்டும் என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.


உலக சந்தையில் எரிபொருள் விலையில் ஏற்படும் மாற்றத்திற்கு ஏற்ப ஒவ்வொரு மாதமும் 1 மற்றும் 15 ஆம் திகதிகளில் எரிபொருட்களின் விலைகள் திருத்தப்படும் என அமைச்சர் காஞ்சன விஜேசேகர முன்னர் தெரிவித்திருந்ததாக அதன் தலைவர் கெமுனு விஜேரத்ன இதன்போது சுட்டிக்காட்டினார்.


அதற்கமைய, அமைச்சர் காஞ்சன விஜேசேகர உறுதியளித்தபடி எரிபொருள் விலைச்சூத்திரத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »