Our Feeds


Thursday, September 15, 2022

SHAHNI RAMEES

வெலே சுதா உட்பட மூவருக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு திகதி குறிக்கப்பட்டது..!

 

போதைப்பொருள் வர்த்தகரான கம்பளை விதானாகே சமந்த என அழைக்கப்படும் வெலே சுதா உள்ளிட்ட மூவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை எதிர்வரும் டிசம்பர் மாதம் 5 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய படபெந்திகே முன்னிலையில் இன்று (15) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அதன்போது, ​​குற்றம்சாட்டப்பட்ட வெலே சுதா பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.



வழக்கின் மற்றுமொரு பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டுள்ள வெலே சுதாவின் மனைவியும் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தார்.

இந்த நிலையில் குறித்த வழக்கின் விசாரணையை எதிர்வரும் டிசம்பர் மாதம் 5 ஆம் திகதி எடுத்துக் கொள்ள நீதிபதி உத்தரவிட்டார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »