Our Feeds


Thursday, September 1, 2022

SHAHNI RAMEES

பிரதி பொலிஸ்மா அதிபர்கள் மூவருக்கு இடமாற்றம்..!

 

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் மூன்று பிரதி பொலிஸ்மா அதிபர்களை இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி மேல்மாகாண குற்றத்தடுப்புப் பிரிவிற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரொஹான் பிரேமரத்ன மேல் மாகாண வடக்கு மாவட்டத்திற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.


அத்துடன் மேல் மாகாண வடக்கு மாவட்டத்திற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் மகிந்த திஸாநாயக்க கண்டி மாவட்டத்திற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, கண்டி மாவட்டத்திற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் எச்.எஸ்.என்.பீரிஸ், நுவரெலியா மாவட்டத்திற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »