ரிஷாட் அபாரமான நடிகர் என்றும் இவரின் கட்சி
எனக்கு துரோகம் செய்தததாகவும் இரட்டை வேடம் போடும் தலைமையோடு என்னாள் இருக்க முடியாது என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம் முஸர்ரப்இன்று (17) தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறியதாவது
“ அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் உயர்பீடம் கூடுவதே என்னைப் பழிவாங்குவதற்குத் தான். கட்சியின் தலைமை ஒரு பக்குவப்பட்ட தலைமை இல்லை. இரட்டை வேடம் போடும் தலைமையோடு என்னாள் இருக்க முடியாது. பசிலை மீண்டும் ஆட்சிக்கு கொண்டுவர வேண்டும் என்று என்னிடம் பேசினார். மொட்டுக் கட்சிக்கு ஆதரவளிப்பதற்கு பல இரகசிய கூட்டங்கள் நடத்தினார்கள். என்னிடமும் நிறைய தடவை பேசினார்கள்”